நாளை சிவராத்திரி சிவன் அருள் பெற எனது அனுபவத்தில் உணர்ந்த ஒன்றை சொல்கிறேன்.
ஆன்மீகத்தில் மூன்று விஷயங்கள் கடைபிடிக்க சொல்வார்கள் பசித்திரு, தனித்திரு விழித்திரு பசியுடன் இருக்க வேண்டும் எதுவும் சாப்பிடாமல், தனிமையில் அமைதியாக இருக்க வேண்டும் இறைவனை மட்டுமே நினைத்து கொண்டு அடுத்து விழிப்புடன் இருக்க வேண்டும் நமக்கு என்ன நடக்கிறது என்பதையும் கவனித்து கொண்டே இருக்க வேண்டும் இந்த மூன்றையும் கடை பிடிங்க கட்டாயம் இதை கடைபிடிப்பதால் நமக்கு கிடைக்க போவது
பசித்திரு, தனித்திரு விழித்திரு இந்த வார்த்தைகளின் முதல் எழுத்துகளை மட்டும் எடுத்து போட்டு பாருங்கள் ப த வி, பதவி சிவலோக பதவி கிடைக்க முயற்சி செய்வோம்.
நாளைய இரவு நம்மை கடந்து போவது அந்த ஈசனாக கூட இருக்கலாம்.
நற்றுணையாவது நமசிவாயவே
No comments:
Post a Comment