நான்கு பேர் சென்ற பாதையில் செல்ல வேண்டும் என்ற பழமொழி அனைவரும் கேள்வி பட்டிருப்பேர்கள். இப்படி கூறியதன் அர்த்தம்
யாரோ நான்கு பேர் சென்ற பாதை இல்லை
சிவ அடியார்கள் திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் , சுந்தரர் இந்த நான்கு பேர் சென்ற பாதையில் போக வேண்டும் என்பதே அந்த பழமொழி கூறுவது
இறைவன் சிவனை அடைய பல வழிகள் அதில் இந்த நான்கு பேர் காட்டிய வழியும் சிறப்பானது .
திருஞானசம்பந்தர் காட்டிய இறைவனை தாய் தந்தையராக அணுகும் சத்புத்ர மார்க்கம்
திருநாவுக்கரசர் காட்டிய இறைவனை எசமானராய் அணுகும் தாச மார்க்கம்
மாணிக்கவாசகர் காட்டிய இறைவனை குருவாய் அணுகும் சன் மார்க்கம்
சுந்தரர் காட்டிய இறைவனை தோழனாக அணுகும் சக மார்க்கம்
நால்வர் சென்ற பாதையில் நாமும் செல்வோம் நற்றுணையாவது நமசிவாயவே
No comments:
Post a Comment